இந்திய ஜனநாயகத்தில் உணமையை சாகடிக்கலாம்.பொய்யை வாழவைக்கலாம் என்கிறபோது இப்படிப்பட்ட ஒரு கதையை எடுக்க முடியாதா என்ன?
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடிகர் கோவிந்தா இரண்டு சகோதரர் கதையை படமாக்க துணிந்திருக்கிறார்.இதில் முன்னாள் தணிக்கைக் குழு அதிகாரி பணம் போட முன் வந்திருக்கிறார். கதையில் அவரது பங்களிப்பும் இருக்கிறது.
கதைப்படி இரு சகோதரர்கள் .ஒருவன் துறவி. மற்றவன் காமாந்தகன். வீட்டில் மனைவி இருந்தாலும் ஊர் மேய்கிறவன்.பாபா ராம்தேவ், விஜய் மல்லையா இருவரையும் மனதில் வைத்துக்கொண்டு ‘அந்த இரு’ கேரக்டர்களையும் படைத்திருக்கிறார்களாம்.
மல்லையா நாட்டை விட்டு ஓடி விட்டவர் உதைக்க வரமாட்டார், ஆனால் பாபா ராம்தேவ் அரசியல் பின்னணியில் பெரிய ஆள். சும்மா விடுவாரா? பார்க்கலாம்.