பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மா, சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒரு படத்தை இயக்கவுள்ளார்.வீரப்பனால் கடத்தி கொலை செய்யப்பட்ட கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் சொந்த மகனான சிவ ராஜ்குமார், இந்த படத்தில் வீரப்பனை கொலை செய்யும் (அதாவது அதிரடிப்படை அதிகாரி டி.ஜி.பி. விஜயகுமார் வேடத்தில் ) போலீசாக நடிக்க உள்ளார் என்பதே.நிஜ வாழ்க்கையில் தந்தையை கொன்றவரை படத்தில் பழிவாங்குவது, போல் வரும் காட்சி புதிய சர்ச்சையை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.வீரப்பனை தேடுவதில், கிட்டத்தட்ட 15 வருடங்களாக 3 மாநில போலீசார் 600 கோடி ரூபாய் செலவழித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.