இமயமலையில் தவம் இருக்கும் முனிவரின் தாடி வளர்ந்து தரையைத் தொட்டால்தான் ரஜினி நடிக்கும் 2.0 படம் வெளிவரும் போலிருக்கிறது என்று பெரு மூச்சு விடுகிற அளவுக்கு அந்த பிரமாண்டமான படம் வேலை வாங்கி வருகிறது.
கங்கணா ரனாவத் நடித்துவரும் ஜான்சி ராணி படத்தின் நிலையும் அதுதான். இந்த இரண்டு படங்களின் வேலையும் அந்தந்த இயக்குநர்களின் கைகளில் தற்போது இல்லை.
எல்லாமே கம்ப்யூட்டர் பிரம்மன்களின் கட்டளைகளில் அடங்கி இருக்கிறது,.
‘குரோமோ பேக் ட்ராப்ஸ் துணை தேவை. படங்களில் பார்த்து அசந்து போகிறோமே அந்த ஜிங்கிடி ஜிக்கா வேலைகள் இன்னும் முழுமை அடையவில்லை.கம்ப்யூட்டர்ஸ் கிராபிக்ஸ் ,விசுவல் எபெக்ட்ஸ் இணைப்பு வேலைகள் பாக்கி. இதை செய்து கொடுக்கும் சில நிறுவனங்கள் மிகவும் தாமதப்படுத்துகின்றன. அவர்களின் பெயர்கள் கெட்டுவிடக்கூடாதே என்கிற கவலை அவர்களுக்கு! படங்களின் பிரமாண்டம் பேசப்படவேண்டும் என்கிற கவலை இயக்குநர்களுக்கு! இப்படி தொழில்நுட்ப வல்லுநர்களிடம் ரஜினியும் கங்கணாவும் சிக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
மன்னாதி மன்னன் சிபாரிசுகளும் அந்த சித்தன்களிடம் எடுபடாது. எல்லாம் காவிரி மேம்பாட்டு வாரியம் அமைவது மாதிரிதான்!
இதுதான் உண்மையான காரணம்.