“சார்வாள்! இம்பார்ட்டன்ட் நியூஸ். ஓல்ட் ஆர்ட்டிஸ்ட் ரம்பா .மறுபடியும் உண்டாகி இருக்காளாம்.கேட்டேளா!”
“என்ன மனுசன்யா நீர். இங்க தூத்துக்குடிய்ல ஜனங்களை கொன்னு குவிச்சிருக்கான் போலீஸ்..பழைய நடிகை புள்ளதாச்சின்னு செய்தி சொல்றீங்க?”
“நீங்க நியூசை நியூஸா பாக்கணும். ரம்பாவுக்கு 39 வயசு. பொம்மனாட்டிக்கு நாப்பது வயசாச்சின்னா மெனோபாஸ் வந்துடும். குழந்தை பெத்துக்க முடியாது.அதனால் இப்ப உண்டாகி இருக்கா .இது சார்வாளுக்கு நியூஸா தெரியலேயாக்கும்! ”
“யோவ் வரது! தமிழ்நாடே கொந்தளிச்சிக் கிடக்கிது. பசு கன்னுக்குட்டி போடும்போது காளையை கொண்டாந்து நிப்பாட்டுறியே சாமி!”
“உங்க சேர்ல நான் உட்கார்ந்திட்டிருக்கணும்,.காலம் மாறிப்போச்சு. நானா இருந்தா எட்டுக்காலம்! நேக்கு பிரம்மன் பொடனிலே எழுதிட்டான். ஆந்திராப் பொண்ணு ரம்பா .அவ ஆத்துக்காரன் சிலோன் டமில்.அவா ரெண்டு பேருக்கும் பிரச்னை.கோர்ட் வரை போய் வந்தவா. பொறந்த ரெண்டுமே பொண்ணு . அவா ரெண்டு பேருக்கும் ஆண் கொழந்தை மேல் ஆசை.அத நியூசாக்க மன்சில்லியே சார் நோக்கு ?”