பெண்ணுரிமை,சமத்துவம் ,என்றெல்லாம் பேசுவதற்கு .கேட்பதற்கு சுகமாக இருக்கும்.ஆனால் நடைமுறையில் ?
பாவம்யா அந்த சின்னப்பொண்ணு! ஸ்ரீதேவியின் மூத்தமகள் ஜான்வி. கொஞ்சம் கொஞ்சமாக அம்மா இல்லாத குறையை மறந்து கொண்டு வருகிறார். நட்புகளுடன் மும்பை வீதிகளில் நடந்து சென்றால் ஓர் அமைதி.
ஆனால் எத்தனை நாட்களுக்கு இது சாத்தியமாகும்?
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற நிலை பரவலாகி வருகின்ற இழிந்த நிலையில் இருக்கிறது இந்தியா, அதுவும் மும்பையில் ! பச்சைப் பிள்ளையைக் கூட பாவிகள் விட்டு வைப்பதில்லை. தாயில்லா பிள்ளை என்றால் சும்மா விடுவார்களா?
முதலில் கை குலுக்கினார்கள்.பிறகு செல்லில் படம் எடுத்தார்கள், பிறகு அப்படி, அப்படியே அங்கே தொட்டு இங்கே தொட்டு ஆபாசம் வரை போய் விட்டார்கள். பாவம் ஜான்வி!
இந்தியாவின் கனவுக்கன்னியின் மகளுக்குப் பாதுகாப்பு இல்லை.