சிம்பு மீது எல்லோரும் கரிச்சிக்கொட்டிய குற்றச்சாட்டு ‘காலம் தாழ்த்தி வருவது”!
காலை பத்து மணி கால்சீட்டுக்கு மதியம் ஒரு மணிக்கு வருவார், அவர் ராக்கோழி என்றெல்லாம் சகட்டு மேனிக்கு சேறு அள்ளி வீசி இருந்தார்கள். ஒரு நல்ல நடிகனைப் பற்றி இப்படியெல்லாம் சொல்கிறார்களே என்கிற கவலை இருக்கவே செய்தது.
சரி அதெல்லாம் உண்மையா?
“அவரைப்பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.அவரின் மற்ற படங்களைப் பற்றி தெரியாது.ஆனால் மணிரத்னம் சார் படத்துக்கு அப்படி ஒரு பங்க்சுவாலிட்டி!காலை ஆறு மணி ஷூட்டிங் என்றால் நான் ஐந்தே முக்கால் மணிக்கு போவேன்.ஆனால் சிம்பு அங்கு ஐந்து மணியில் இருந்தே இருப்பார்.” என்கிறார் அரவிந்தசாமி