தரை லோக்கலில் இறங்கிவிட்டாராம் அனுபமா பரமேஸ்வரன். ‘கொடி’ படத்தில் முட்டை வியாபாரம் செய்தாரே அதே அனுபமாதான். தெலுங்கு படத்தில் இவருக்கு தனி மவுஸ். இவருக்கு தயாரிப்பாளர் கேரவான் ஒதுக்கி இருந்தார், அது இரட்டை வாசல் உள்ளது. இரண்டு நடிகர்கள் தங்கிக்கொள்ளலாம் .தனித்தனி வாசல்தான் என்றாலும் அனுபமாவுக்கு பிடிக்கவில்லை. சிங்கிள் டோர் கேரவான்தான் வேண்டும் என்று கொடி பிடிக்காத குறை!
“அதனால் என்னம்மா ,நாம்ப தனியாத்தானே இருக்கோம் .வசதியாத் தானே இருக்கு “என்று அனுபமாவின் உதவியாளர் சொல்லி இணங்க வைக்கப்பார்த்திருக்கிறார்.
அவ்வளவுதான்!
கட்டி ஏறி ,காதை அறுக்காத குறை! அவ்வளவு திட்டு,
“இவ்வளவு பேச்சைக்கேட்டுக் கிட்டு உங்கிட்ட வேலை பார்க்கனும்னு தலை எழுத்தா? போம்மா நீயும் உன் வேலையும்” என்று சொல்லி விலகிப் போய் விட்டார் ரோசமுள்ள பெண்.
இப்போது அனுபமாவுக்கு சிங்கிள் டோர் கேரவானுடன் தனி உதவியாளையும் கொடுக்கிற வேலை தயாரிப்பாளருக்கு!