வாய் இருக்கிறதே என்கிற தைரியத்தில் சடக்கென வார்த்தைகளை விட்டு படக்கென வாங்கி கட்டிக்கொள்வதில் ‘கருத்து’கஸ்தூரியை விஞ்சுவதற்கு யாருமில்லை,! அத்தனையும் வீரத் தழும்புகள்!
அண்மையில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் பற்றிய நீதிமன்ற தீர்ப்புகள் பற்றிய கற்பூர கருத்துகளை நையாண்டியுடன் டிவீட் பண்ணியிருந்தார் கஸ்தூரி.! திருநங்கைகளின் படமும் போட்டு!
“கோர்ட்டில ஸ்பிலிட் வெர்டிக்ட்டாமே! அப்போ 18 ஐ பிரிச்சி ஆளுக்கு ஒம்போதா..ஆ ..ஆங்!”
கொதித்துப் போய் விட்டார்கள் திருநங்கைகள்! கஸ்தூரியின் வீட்டுக்கு முன்பாக பெரிய ஆர்ப்பாட்டம். கண்டனம் என்று பிரித்து மேய்ந்து விட்டார்கள்.
வேற வழி கஸ்தூரிக்கு தெரியவில்லை. சட்டென விழுந்துவிட்டார்,
“ரொம்ப வேடிக்கையா பேசுறதா நினைத்துத் தப்பா ஒரு டிவீட் செய்து விட்டேன். அதனால் நான் ரொம்ப மதிக்கிற என்னுடைய நண்பர்கள் சகோதர சகோதரிகள் மனசு வேதனைப்படுது என்றதும் அந்த டிவீட்டை நீக்கிட்டேன். இப்போது பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டுருக்கேன். நான் மனுஷிதான்.தவறு செய்யாமல் யாரும் இருக்க மாட்டாங்க.நானும் தவறு செய்வேன்.அப்ப நீங்க என்னை வச்சு செய்யுங்க.இப்ப நான் செய்தது தப்புதான்! சாரி கேட்டுக்கறேன்!”
அந்த வாய்ப்பு சீக்கிரமே வந்துருமா?