டைரக்டர் மோகன்ராஜா சொன்னதைக் கேட்டதுமே கிறுகிறுத்து விட்டது ! நம்மை அறியாமலேயே மேனியில் நடுக்கம். இதுவரை யாரும் சொல்லாத உண்மைகளை சொல்லி பதறடித்து விட்டார்.
“பேராண்மை,வனமகன்,பூலோகம் இதெல்லாம் அவனுக்கு (ஜெயம் ரவி.) பெரும் சோதனைகளைத் தந்த படம். ஆனால் வீட்டில் எதையும் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டான். நாங்கள் ரெண்டும் பேரும் கடுமையாக டிஸ்கஸ் பண்ணிக்கொள்வோம். வனமகன் படப்பிடிப்பின் போது நடக்கவிருந்த பேராபத்தை நினைத்தால் இன்றும் குலை நடுங்குகிறது. மிகப்பெரிய பள்ளத்தாக்கில் விழுந்து காணாமல் போயிருப்பான். அவ்வளவு ரிஸ்க் எடுத்து நடிக்க வேண்டுமா என சண்டை போட்டேன்.டிக் டிக் டிக் வந்த பிறகுதான் அவன் முகத்தில் கடந்த பத்து நாட்களாக சிரிப்பைப் பார்க்கிறேன்” என்றார் அண்ணன் மோகன்ராஜா.