பேய் அடித்து பார்த்திருக்கிறோம்.நாய் கடித்துப் பார்த்திருக்கிறோம். ஆனால் கவர்ச்சிப் பேரழகி அடித்துப் பார்த்திருக்கிறீர்களா?
நடந்து வந்தால் மொத்த ஊரும் பட்டுக்கம்பளம் விரிக்கிறது தீபிகா படுகோனேக்கு! பட்டினி கிடந்தாவது பார்ப்போம் என்று மணிக் கணக்கில் காத்திருக்கிறார்கள். கிளியோபாட்ராவை பார்த்ததில்லை . பார்ப்பதெல்லாம் தீபிகாவைத்தான்!
சிலை செதுக்க வருகிறவன் சித்தம் கலங்கி ஓடி விடுவான் உளியும் ஒடிந்து விடும்.!
தனக்கு நேர்ந்த அவலத்தை சொல்கிறார் தீபிகா. அதிர்ந்து விடுவீர்கள்,
“2014 -ல் பாலிவுட்டில் எனக்கு கோல்டன் பீரியட் ,பொற்காலம். திடீர்னு மன அழுத்தம்.மண்டையைக் குடைந்தது .என்னுடைய வெற்றிகள், ஸ்டேட்டஸ் பற்றிய கவலையினால் அல்ல.
சிலருடைய அட்வைஸ்.! சித்திரவதை!
டைரக்டர்கள்,தயாரிப்பாளர்களின் கவனத்தை ஈர்க்கவேண்டும் என்றால் நீ மார்பழகை ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டும் என்றார்கள். நான் அந்த மாதிரி ஆள் இல்லை. எனக்கு கட்ஸ் இருக்கிறது என்று சொல்லி தவிர்த்து விட்டேன்” என்கிறார் தீபிகா,