“பழகிட்டியா,நெருங்கிப் பழகி கர்ப்பம் அடைஞ்சிட்டாளா, ? அப்ப அவளையே கல்யாணம் பண்ணிக்கோ” என்று அட்வைஸ் செய்தால் அவள் தாய். கோவிலில் வைத்து கும்பிடு போடலாம். ஆனால் நேர்மாறான தாயாக இருந்துவிட்டால் ?
சாவடியில் நிறுத்தி குமுறி குமுறி எடுக்கலாம்.
பிரபல நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் மனைவி நடிகை யோகிதா பாலி,இவர்களின் பிள்ளை மகா அக்ஷய். வயசுப்பையன்.வசதியான குடும்பம். கூடா நட்பு.ஒரு நடிகையின் வாழ்க்கையை சூறை ஆடிவிட்டது,
“கல்யாணம் பண்ணிக் கொள்வதாகச் சொல்லி நாலு வருஷம் காதலிச்சார். பெரிய குடும்பத்துப் பிள்ளை.ஏமாத்தவா போறார்னு நினைச்சுத்தான் பழகினேன். கர்ப்பம் ஆனேன், ஏதோ மருந்து வாங்கிக் கொடுத்து அதை கலைக்க வைத்தார். வெளியே சொன்னா ஆபத்து ! பயங்கர விளைவுகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்னு அம்மாவும் மகனும் மிரட்டினாங்க .எனக்குப் பாதுகாப்பு வேணும் உசிருக்கு உத்திரவாதம் இல்ல” என்று போஜ்புரி நடிகை வழக்குத் தொடர்ந்தார்..
விசாரித்த டில்லி நீதிமன்றம் அம்மா மகன் மீது வழக்குப் பதிவு செய்ய உத்திரவிட்டிருக்கிறது.மகா அக்ஷய் மீது பாலியல் வன்புணர்வு குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.