இதெல்லாம் கொடுமைங்க.! “எட்டு வருசமா காதலிச்சுட்டு இப்ப வேணாம்னு இன்னொருத்தனுடன் வாழ்றியே ,இது நியாயமா?” இது அந்த கதாநாயகனின் கேள்வி. ஆள் நிறை போதை!
“நீயாத்தானய்யா ‘லவ்’வ ‘கட்’ பண்ணிட்டுப்போனே! எங்க காதல் வாழ்க்கை நிம்மதியா போயிட்டிருக்கு. போயிடு! போதையிலே இருக்கே! உன்னோட பேச விரும்பல போயிடு!”
“முடியாது. நீதான் வேணும்!”
“சொன்னா கேளு! மானேஜர் இந்தாளை வெளியே அனுப்பு!” இவ்வளவுதான் நடந்திருக்கு . அந்த ஹீரோ அந்த நடிகையை அடி பின்னி எடுத்திட்டார்.
வங்காள மொழியில் பெரிய ஸ்டார் சாய்குமார். பெரிய நடிகை ஜெயந்திகா. இருவரும் நம்ம ஊர் ஜெமினி— சாவித்திரி மாதிரி ஹிட் படங்கள் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள். இடையில் என்ன நடந்ததோ காதலை முறித்துக்கொண்டார் சாய் குமார். நடிகையும் இன்னொருவரை காதலிக்க ஆரம்பித்திருக்கிறார்.
திடீரென ஞானோதயம் பிறந்த மாதிரி சாய்குமார் போதையை ஏற்றிக்கொண்டு சமரசம் போன இடத்தில்தான் அடி உதை.
சமரசம் பேசப்போகிற ஆள் போதையிலா போவான்? இப்ப ஹீரோ கஸ்டடியில்!