காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை இயக்குநர் பா.ரஞ்சித் ,நடிகர் கலையரசன் இருவரும் சந்தித்துப் பேசி இருக்கிறார்கள், இது பற்றி ராகுல் காந்தியே ‘ட்வீட்’ போட்டிருக்கிறார். “சென்னையை சேர்ந்த பிளாக் பஸ்டர் படங்களைக் கொடுத்துவரும் இயக்குநர் ரஞ்சித் நடிகர் கலையரசன் இருவரும் என்னை சந்தித்துப் பேசினார்கள்.தமிழக அரசியல்,சமூகம் ,சினிமா சார்ந்த விஷயங்களைப் பேசினோம்.”என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் மற்றும் சிலரின் விடுதலை குறித்தும் பேசியிருக்கலாம் என்கிறார்கள்.
சாதி மத அரசியல் பற்றியும் அவர்கள் பேசி இருக்கிறார்கள்.இந்த சந்திப்பு முன்னரே நடந்திருக்க வேண்டும் .ஆனால் தற்போதுதான் நடந்திருக்கிறது.