ஊரே ஒன்னு கூடி கறுப்புக் கொடி காட்டினால் டி ராஜேந்தர் மட்டும் தனியாக நின்று புதுக் கொடியை காட்டுவார். அதில் ஓரளவுக்கு நியாயமும் இருக்கும்.
ஆந்திரத்து நடிகை ஸ்ரீ ரெட்டி தன்மீது பாலியல் ரீதியாக பாய்ந்தவர்களின் முகங்களை நினைவுப் படுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் அடடே இவ்வளவு பேரா என்று மலைப்பு வருகிறது. வருசங்கள் கடந்து இப்போது ஏனம்மா அவர்களைச்சொல்கிறாய் என்கிற சந்தேகமும் வருகிறது. இவ்வளவு பேருக்கும் அம்மணி இணங்கித்தானே இருந்திருக்கிறார்.?
இந்த ஸ்ரீ ரெட்டி சிக்கலில் தற்போது டி.ராஜேந்தர் தலை கொடுத்திருக்கிறார்.
” நான் திரைத்துறையில் இருக்கிறேன் என்பதால் சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது, சமுதாயத்தில் எவ்வளவோ குற்றச் சாட்டுகள். திரைத்துறையில் நல்லவர்களும் இருக்கிறார்கள்,சில மோசமானவர்களும் இருக்கிறார்கள்,பாலியல் புகார் சொல்வது ஸ்ரீ ரெட்டியின் உரிமை.அவரின் புகார்களுக்கு பதில் சொல்ல வேண்டியது புகார்களுக்கு ஆளானவர்கள்தான்! அவர்களுக்கு வாய் இல்லையா?”என கேட்டிருக்கிறார்.
ஸ்ரீ ரெட்டிக்கு ஒரு வக்கீல் கோலிவுட்டில் இருக்கிறார்.