இதயத்தில் ஊடுருவி உட்கார்ந்து கொண்டு நம்மை சிரிக்க,உருக வைப்பது எதுவோ அதுவே உயர்ந்த படம். மேலோட்டமாக பார்த்து ரசிப்பது என்பது செயற்கையானது. இது கடந்து விடும். 25 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ‘கிழக்குச் சீமையிலே’ நமது உணர்வுகளில் கலந்து ஒன்றி விட்ட உயிரோவியமாக இருந்தது. அதற்கு நிகராக இதுவரை?
பிரமாண்டங்களின் பிரம்மன் கலைப்புலி தாணு, அவர் என்ன சொல்கிறார்?
“கிழக்குச்சீமையிலே ‘எனும் கிராமத்துக் காவியம் வெளிவந்து 25 ஆண்டுகளைக் கடந்த பின்பு என் கலைத்தாகத்தைத் தீர்க்கும் விதமாக நான் என்றும் பெருமை கொள்ளும் படைப்பாக ’60 வயது மாநிறம்’அமைந்திருக்கிறது. எனக்கு மிகுந்த மனநிறைவைத் தந்திருக்கிறது!” என புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்,