கலைஞர் என்பவர் தனி மனிதர் அல்லர். அவர் சகாப்தம். சாதனையாளர். அவர் இன்று நம்மிடையில் இல்லை. ஒரு தேசியத் தலைவருக்கு நினைவேந்தல் என்பது அரசியல் கூத்துகளுக்கு இடம் அளிக்கும் மடம் ஆகிவிடக்கூடாது.
அல்லது கூட்டணிக்கு ஆள் பிடித்து இணை சேர்க்கும் இடமாகவும் மாறிவிடக்கூடாது.
அப்படி நடக்குமேயானால் அது மாபெரும் தலைவனுக்கு இழைக்கப்படுகிற துரோகம் ஆகி விடும்..
அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கிற தேசிய நினைவேந்தலில் பிஜேபி சார்பில் அமித்ஷா கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
குலாம் நபி ஆசாத் (காங்.) சரத்பவார் ( தேசிய வாத காங்,) முன்னாள் பிரதமர் தேவே கவுடா, சந்திரபாபு நாயுடு, ( ஆந்திர முதல்வர்,) நிதிஷ் குமார்( பிகார் முதல்வர்.) கேஜ்ரிவால்.(டெல்லி முதல்வர்.) பரூக் அப்துல்லா (ஜம்மு காஷ்மீர்,) நாராயணசாமி ( பாண்டிச்சேரி சி,எம்.) சீத்தாராம் எச்சூரி ( மார்க்சிஸ்ட் கம்யூ) டி,ராஜா.( இந்திய கம்யூ.) காதர் மைதின் (மு.லீக்) டெரிக் ஓ பிரைன் ( திரினாமுல் காங்.)என இன்னும் பலர் கலந்து கொள்கிறார்கள்.
ஆனால் அமித் ஷா கலந்து கொள்ள மாட்டார் என்பதாக சுப்பிரமணியன் சுவாமி சொல்கிறார். இவர் பிஜேபியின் தலைவர்களில் ஒருவர். அதிகாரப்பூர்வ தலைமையிடம் சொல்லாமல் இவரை விட்டு சொல்ல வைத்திருப்பது எதை நினைத்து என்பது தெரியவில்லை. குழப்பம் விளைவிக்கப் பார்க்கிறார்கள் என்றே தோன்றுகிறது.
3௦ம் தேதி நிகழும் நினைவேந்தலுக்கு க.அன்பழகன்தான் தலைமை தாங்குகிறார். திமுக தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். எச்சரிக்கையாக இருப்பார்கள் என நம்புவோம்.