தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா,கலைஞர் கருணாநிதி வரிசையில் மு.க.ஸ்டாலின் திமுக.வின் தலைவராக தேர்வு செய்யப்படுகிறார்.65 மாவட்டச்செயலாளர்கள் தலைவர் பதவிக்கு செயல் தலைவராக இருக்கிற ஸ்டாலின் பெயரை மட்டுமே பரிந்துரை செய்திருக்கிறார்கள். இம்மாதம் இருபத்தி எட்டாம் தேதி தலைவர்,பொருளாளர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இன்று தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை கலைஞர் நினைவிடத்தில் வைத்து ஆசி பெற்றபின்னர் தாக்கல் செய்தார், இவரைப் போலவே பொருளாளர் பதவிக்கு துரை.முருகனும் தாக்கல் செய்தார் .இருவரும் திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் தங்கள் மனுக்களை அளித்தனர். கலைஞரால் கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி செப் 5 ம் தேதி மெரினாவில் தனது ஆதரவாளர்களின் பேரணி நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்,
அந்தப் பேரணியினால் திமுகவில் மாற்றம் ஏற்படும் என்பதாக அழகிரி அறிவித்திருக்கிறார், “நான் மறுபடியில் தி.மு.க.வில் சேருவதில் தவறு இல்லையே! என்னை நீக்கிய பிறகு நடந்த அத்தனை தேர்தலிலும் திமுக தோல்வியைத்தான் சந்தித்து இருக்கிறது,”என்பதாகவும் சொல்லி இருக்கிறார். இவரை கழகத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் கலைஞரின் மகள் செல்வியின் ஆதரவு இருப்பதாக சொல்லப்படுகிறது.