‘துருவங்கள் 16’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் ‘நரகாசூரன்’.
அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் நடித்துள்ளனர். ரோன் இதான் யோகன் இசையமைப்பு. சுஜித் சாரங் ஒளிப்பதிவு . பேண்டசி திரில்லர் படமாக உருவான இந்த படத்தில்தான் பணவிவகாரம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு வந்தது, இயக்குனர் கவுதம் மேனன் விலகிக்கொண்டார். கார்த்திக் நரேனே இப்படத்தை முழுவதுமாக தயாரித்துள்ளார்.
இதையடுத்து இப்படம், வருகிற வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 31) ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த தினத்தில் ‘அண்ணணுக்கு ஜே’, ‘இமைக்கா நொடிகள்’ உள்ளிட்ட படங்கள் வெளியாவதால்,போதுமான தியேட்டர்கள் கிடைக்காததால்இப்படத்தின் வெளியீட்டு தேதி தற்போது தள்ளி வைக்கப்பட்டு வரும்,செப்டம்பர் 13-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறையில் வெளியாக இருக்கிறது.
அன்றும் ,சிவகார்த்திகேயனின் ‘சீம ராஜா’, விஜய் சேதுபதியின் ‘96’, சமந்தாவின் ‘யு டர்ன்’ ஆகிய பெரிய படங்கள் லிஸ்ட்டில் உள்ளது குறிப்பிடத் தக்கது. நரகாசூரனுக்கு என்னதான் நடக்கிறது?