இப்போது அலறுகிறார் மீனா “அவர் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர்” இருந்ததாக.!
“ஏம்மா ..அந்த கொடுமைய அப்போதே சொல்லிருக்கலாம்ல?”
ஒரு தெலுங்குப் பொண்ணு நிர்வாணப்போராட்டம் வரை போயி ,யார் யார் தன்னை யூஸ் பண்ணிட்டு கையைக் கழுவிட்டு போனாங்க என்பதை பட்டியலிட்டு காட்டி இத்தனை மாதம் கழித்து இப்போதுதானா சொல்லணும்? கடமை உணர்ச்சி லேட்டா தட்டி எழுப்பி இருக்கு?
என்ன சொல்லி இருக்கிறார் மீனா?
“எல்லாத் துறைகளிலும் பெண்களுக்கு பிரச்னை இருக்கு,!நான் அம்மாதிரியான பிரச்னைகளை சந்திக்கலேன்னாலும் என் காலத்திலும் பிரச்னைகள் இருந்தது. வக்கிர புத்தி உள்ள ஆண்கள் ஒரு பொண்ணுகிட்ட டீல் பேசுறபோது தனக்கும் மனைவி மகள் இருக்காங்க என்பதை உணர்ந்திருக்கணும்,திறமை உள்ளவங்க வாய்ப்பை எந்த காம்பரமைசும் பண்ணிக்காம போராடி வாங்கனும்” என்கிறார் மீனா