மேற்குத்தொடர்ச்சி மலையின் வெற்றியைத் தொடர்ந்து லெ மேஜிக் லாண்டர்ன் தியேட்டரில் நன்றி அறிவிப்புக் கூட்டத்தை நடத்தினார்கள். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ,இயக்குநர் லெனின் பாரதி என தெரிந்த முகங்கள். மற்றவர்கள் குடத்து விளக்குகள்.அசல் தமிழர்கள். கிராமிய வாழ்வியல் தடயங்கள். படத்தில் கதையின் நாயகன்களாக வாழ்ந்திருந்தவர்கள். அரிதாரம் பூசாத வார்த்தைகள். கதையில் ஒரு மூதாட்டிக்கு கிறுக்கச்சி வேடம். வாழ்ந்திருந்தார், அவர் டேக் முடிந்ததும் அந்த மொட்டை வெயிலில் அவருக்காக யாரும் குடை பிடிக்கவில்லை. வெகுண்டெழுந்து விட்டாராம் இயக்குநர் லெனின் பாரதி.
“இந்நேரம் நயந்தாரான்னா மூணு குடை போயிருக்கும்ல? சாதாரண மனுசிதானே?அதான் காயட்டுமே வெயில்லன்னு விட்டுட்டிங்க” என்று உதவியாளர்களைக் கடிந்து கொண்டிருக்கிறார் லெனின் பாரதி. பொதுவுடமையும் புரட்சியும் கலந்த பெயர் அல்லவா!