திரைப்பட விழாக்களில் தவிர்க்க முடியாத பேச்சாளராக மாறி இருக்கிறார் பாக்யராஜ்.
எத்தனையோ விழாக்களைப் பார்த்திருக்கிற பிரசாத் லேப் ‘ஏகாந்தம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நிறைய வித்தியாசங்களைப் பார்த்தது. கிராமிய மணம் தூக்கல்.
அவித்த வேர்க்கடலை, முருங்கைக்காய் சூப், குழிப் பணியாரம், அடை இப்படி சிலபல அயிட்டங்கள். தயாரிப்பாளர் அண்ட் இயக்குனரான ஆர்செல் ஆறுமுகத்தின் ஏற்பாடு.
பாக்யராஜ் வந்ததும் முருங்கைக்காய் சூப் வழங்கப்பட்ட ஏரியாவுக்கு அழைத்துச்சென்றனர். அவர் நாஸூக்காக மறுத்து விட்டார்.
தயாரிப்பாளர்கள் சங்கச்செயலாளர் கதிரேசன், அம்மா கிரியேசன்ஸ் சிவா,தயாரிப்பாளர் பி.எல் . தேனப்பன், கே.ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
பாக்யராஜின் பேச்சுதான் வழக்கம் போல ஹை லைட்.
“இப்ப வர்ற புதுமுக டைரக்டர்களுக்கு விஷப் பரீட்சை மாதிரிதான்! கட்டம் சரியா இருந்தா தேறிடலாம்.எனக்கு கட்டம் சரியா இருந்துச்சு .எங்க டைரக்டர்ட்ட மூணு படம் ஒர்க் பண்ணிய பிறகு தனியா படம் பண்ண ஆரம்பிச்சிட்டேன். ஆர்செல் ஆறுமுகத்துக்கும் கட்டம் சரியாத்தான் இருக்கு,
நான் எங்க டைரக்டருடன் ஒர்க் பண்ணிய முதல் படம் 16 வயதினிலே! கிராமத்துப் படம். பேன்ட் சர்ட் போட்டுட்டுப் போயிருந்தேன்.
“கிராமத்துப் படம் எடுக்கிறோம். நீ என்ன பேன்ட் சர்ட் போட்டுட்டு வந்திருக்கே. முதல்ல அப்படிப்போயி ஓரமா உக்காந்து ஸ்கிரிப்டை படி “ன்னு எங்க டைரக்டர் உக்கார வச்சிட்டார்.
ரெண்டாவது படம் கிழக்கே போகும் ரயில். ரைட்டர் செல்வராஜ்க்கு உதவியா இருந்தேன். லவ் சீன்லாம் பிரமாதமா பண்ணிருந்தோம். பொதுவா கிராமத்து சீனெல்லாம் கிராமங்களுக்குப் போய்த்தான் எடுத்தோம். ஆனா இப்போ செட் போட்டே எடுத்திடலாம்.பாவாடை ,தாவணியை பார்க்கிறதே அதிசயமா இருக்கு! எல்லாம் மாடர்ன் டிரஸ்தான். நைட்டியைக் கூட மாடர்ன் டிரஸ் மாதிரி போட்டுக்கிட்டு கடைவீதிகளுக்கு வர்றாங்க.நெட்டிவிட்டி மாறிப் போச்சு.”என்றார் பாக்யராஜ்.
விவாந்த்,நீரஜா அனுபமாகுமார்,கை தென்னவன் ,டைரக்டர் கவுதம் கிருஷ்ணா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.