சொத்து சேர்ந்ததும் சொந்தங்கள் மறக்கப்படுகிற இந்த காலத்தில் பிறந்த நாட்டையும் மக்களையும் மறக்காமல் இருப்பது எப்படி?
விஜயசேதுபதியிடம் கேளுங்கள். மனிதனாவீர்கள்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப் பட்டு வாழ்க்கையை தொலைத்த தமிழர்கள் ஏழு பேர் இன்னும் சிறைச்சாலையில்.!அவர்களை விடுவிக்க வேண்டும் என்று எத்தனையோ தலைவர்கள் கேட்டும் தமிழக அரசு கேளா செவியராக இருந்து விட்டது.
தமிழக அரசுக்கு அவர்களை விடுவிக்கும் உரிமை இருக்கிறது என எத்தனையோ சட்ட நிபுணர்கள் சொல்லியும் அரசியல் காரணமாக அதையெல்லாம் புறந்தள்ளினார்கள்.
இறுதியாக உச்ச நீதிமன்றமே சொல்லிவிட்டது ‘மாநில அரசுக்கு உரிமை இருப்பதாக.!
இதனடிப்படையில் விஜயசேதுபதி அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். “அற்புதம் அம்மாளுக்கு பேரறிவாளன் இன்னும் குழந்தைதான்.அவரை தமிழக அரசு விடுதலை செய்து அம்மா கிட்ட சேர்க்கணும்”
கேட்பாங்களா? மொத்த தமிழகமும் குரல் கொடுக்குது மினிஸ்டர்ஸ்!