சேர்ந்து வாழ்ந்தார்கள். நடிகர் ஜெய்யின் குடும்பத்து உறவுகள் உறவு சொல்லி கூப்பிட்டுக் கொண்டார்கள். இடையில் என்ன நடந்ததோ இருவருமே காணாமல் போனார்கள்.
படத்தின் புரமொஷன்களில் கலந்து கொள்ளாததால் ஜெ மீது வேப்பங்காய் கசப்பு இருக்கிறது. பொது மேடை களில் பகிரங்கமாக கண்டிக்கப்பட்டார். ஆனாலும் தோளுக்கு மேல தொண்ணூறு அடி .துடைத்து விட்டால் ஒண்ணுமில்லை என்கிற லெவலுக்கு போய் விட்டார் ஜெய். கண்ணுக்கெட்டிய தூரத்தில் பத்திரிகையாளர் தெரிந்து விட்டால் இவர் காணாமல் போய்விடுவார். ஜெய்யை பிரிந்த அஞ்சலி தற்போது மிகவும் உடம்பை குறைத்திருக்கிறார்.
துபாயில் நடந்த சைம்மா விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செம ஆட்டம் போட்டிருக்கிறார். தற்போது அஞ்சலி கையில் ஏழு படங்கள். தெலுங்கு 1 மலையாளம் 1 மிச்சம் ஐந்தும் தமிழில்! மாஜி காதலர் ஜெய்யின் கையில்?