தலைக்கு வெயிட் ஏறக்கூடாது என்பார்கள். ஆனால் ஏற்றிக்கொண்ட பலர் மக்களின் வெறுப்புக்குள்ளாகிப் போய் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு நயனுக்கு மண்டையில் கனம் ஏறி இருப்பதாக யாரும் சொல்லவில்லை. ஒருவேளை கால்ஷீட் கிடைப்பதில் பிரச்னை வரும் என்பதால் அடங்கிப் போயிருக்கலாம்.
ஆனால் ஆந்திராவைச் சேர்ந்த டைரக்டர் மாருதி பகிரங்கமாக சொல்லி இருக்கிறார்.
“பாபு பங்காரம் படப்பிடிப்பில் நடந்த சம்பவம். வெங்கடேஷ் ,நயன்தாரா நடித்திருக்கிற படம். வெங்கடேசுக்கு நயன்தாரா மரியாதை தருவது இல்லை. இது மிகவும் கஷ்டத்தை தந்தது.என்னால் சகித்துக் கொள்ள முடியவில்ல.
“நீங்கள் இந்த செட்டில் எனக்குக்கூட மரியாதை தரவேண்டாம். மதிக்க வேண்டாம். ஆனால் பெரிய நடிகர் வெங்கடேஷ். ஆந்திராவின் மதிப்புக்குரியவர் அவரிடம் மரியாதையுடன் நடந்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டேன்.”என்கிறார்.