தலை சிறந்த ஓவியனுக்கு விரல் ஒடிந்தால் எப்படி ஓவியம் வரைவான்?
அப்படி ஒரு கட்டம் இசைஞானி இளையராஜா வாழ்க்கையிலும் நடந்தது.
அவரே சொல்கிறார்.
“வயிற்றில் ஆபரேஷன். பாடக்கூடாது அதிகம் பேசக்கூடாது என்பது டாக்டர்கள் உத்திரவு. தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் வந்தார்.
“ஷூட்டிங் முழுவதும் முடிஞ்சிருச்சி .சாங் சீன் மட்டும் பேலன்ஸ். ரஜினி வெயிட்டிங். சாங் வேணுமே?” என்கிறார்.
என்ன செய்ய முடியும்?சிச்சுவேஷன் சொல்கிறார்.
‘காதலின் தீபம் ஒன்று ‘பாட்டுக்கான ட்யூன் முழுவதையும் விசில் அடித்தே கம்போஸ் பண்ணிக் கொடுத்தேன்” என்றார் ஞானி.
வல்லவனுக்கு விசிலும் ஓர் ஆயுதம்தான்!