சினிமாவின் சாபக்கேடே பாலியல் தொல்லைதான். ஒரு சிலர் செய்கிற தவறு ஒட்டு மொத்த சினிமாவை காயப்படுத்தி விடுகிறது. தப்பு செய்து விட்டு வாய்ப்பு கிடைக்காத சிலர் முச்சந்திக்கு வந்து முழங்கி விடுவதால் சினிமாவே கேட்டு விட்டதாக ஆகி விடாது.
இதோ கொடி படத்தில் முட்டைக்கு கலர் பூசிய நடிகை அனுபமா பரமேஸ்வரன் சொல்வதை கேளுங்கள்.
“பாலியல் தொல்லைகள் இருப்பது உண்மை.ஆனால் வெளியில் சொல்லத் தயங்குகிறார்கள்.சொன்னால் பிழைப்புக் கெட்டு விடும் என்கிற பயம். எப்படியாவது முன்னேறிவிட வேண்டும் என்கிற ஆர்வத்துடன் வருகிறவர்கள்தான் சிக்குகிறார்கள்..ஹாலிவுட்டில் ஆரம்பித்த புயல் பாலிவுட்டில் பலவீனம் அடைந்து விட்டது. அதன்பின்னர் மற்ற மாநிலங்களில் மேலெழுந்தவாரியாக பேசப்படுகிறது. அவ்வளவுதான்”என்கிறார்