காதலித்துப் பிரிவதென்றால் அதை விட துயரம் வேறு எதுவுமில்லை!
மனம் விட்டு எப்படியெல்லாம் பேசியிருப்பார்கள், எங்கெல்லாம் சென்றிருப்பார்கள். எத்தகைய இனிமையான தருணங்கள் வந்து போயிருக்கும். ஆனால் இதைப்பற்றி சற்றும் நினைக்காமல் “பிரிஞ்சிட்டேன் ,நிம்மதி ” என யாராவது சொன்னால் எத்தகைய வலிக்கு ஆளாகி இருப்பார்கள்.
ஆனால் நடிகை ராஷ்மிகா மகிழ்ச்சியாக இருக்கிறார்.
அவர் நடித்துவந்த படம் முன்னாள் காதலர் ரட்சித் ஷெட்டி படம்தான்! ஆனால் இடையிலேயே விலகி விட்டார்.
காரணம் என்ன?
“ரட்சித்தின் தலையீடு படத்தில் இருந்தது.அதனால் நல்ல மரியாதையுடன் வெளியில் வந்துவிட்டேன். இனி எங்களைப் பற்றி எழுத வேண்டாம்.” என்கிறார் .
நல்லாரும்மா!