நடிகர் சூரிக்கு பரோட்டா ஜீரணம் ஆகவில்லை போலிருக்கிறது. சில படங்களில் காமடி நடிகர்கள் வசனங்களில் சொந்த வசனங்களையும் சேர்த்துக் கோர்த்து விடுவார்கள். அது சில நேரங்களில் சிரிப்பைத் தரும். பல நேரங்களில் அரிப்பாகி விடும்.
அண்மையில் வெளியான சாமி 2 வில் ஒரு கட்டத்தில் வசனம் பேசி இருப்பார். படத்துக்கான வசனம் இயக்குநர் ஹரி என்பதை மனதில் இருத்திக் கொள்க.
” அம்பிகாபதியா இருந்தா என்ன , ஏன் அந்த விஜய சேதுபதியா இருந்தா என்ன ,இன்னிக்கி விடமாட்டேன்” என சூரி பேசி இருப்பார். அந்த வசனத்தில் விஜயசேதுபதியின் பெயரை ஹரி எழுதி இருக்கவே மாட்டார். ஆனால் தனக்குள்ள நெருக்கத்தின் காரணமாக சூரியே எடுத்து விட்டிருப்பார். இது மக்கள் செல்வனின் ரசிகர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்திவிட்டது.
காய்ச்சி எடுக்கிறார்கள்.!