பிக்பாஸ் ஐஸ்வர்யாவைப் பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்தே அராத்து கேரக்டராகவே அவரை பிக்பாஸ் வடிவமைத்திருந்தது. அவரும் அதை பயன்படுத்திக் கொண்டு மற்றவர்களை துன்புறுத்தி வந்தார், நோயை காரணம் காட்டி மும்தாஜ் மகாராணி போல சுற்றி வந்தார். ஒரு போலீஸ் அதிகாரிக்குரிய மிடுக்குடன் மற்றவர்களிடம் நடந்ததை பார்க்க முடிந்தது.
ஐஸ்வர்யாவைப் பொறுத்தவரை ஆங்கிலம் பேசக்கூடாது என்று விதி இருந்தும் இன்று வரை பெரும்பாலும் ஆங்கிலம்தான். அவர் அழுவதற்காகவே ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டதைப் போல அந்த அறைக்குள்தான் ஐஸ்வர்யா புலம்புவார்.
இப்போது பிக்பாஸ் கூட்டுக்குள் ஐஸ்வர்யா, ஜனனி,ரித்விகா,விஜயலட்சுமி ஆகியோர் மட்டுமே இருக்கிறார்கள்.மக்களின் ஆதரவு ரித்விகாவுக்குத்தான் இருக்கிறது. நாற்பத்தெட்டு சதவிகித ஆதரவு இருக்கிறது. மக்களால் வெறுக்கப்படுகிற ஐஸ்வர்யாவை வின்னராக்கவேண்டும் என்பது பிக்பாஸின் நோக்கமாக இருக்கும் என தெரிகிறது.
அவர் வட இந்தியப் பெண். மற்றவர்கள் தமிழ்ப் பெண்கள். வட மாநிலங்களில் உள்ளவர்களும் ஐஸ்வர்யாவுக்கு ஓட்டுப்போட வைக்கும் முயற்சியில் பிக்பாஸ் இறங்குவார் என தெரிகிறது.