சாமியாரையும் கமண்டலத்தையும் எப்படி பிரிக்க முடியாதோ அப்படி ஆகிப் போனது பிரகாஷ்ராஜின் நிலையும்! மனிதர் கோபக்காரர்தான் ,ஆனால் ஒரு நடிகருக்கு இழுப்பு விடுமளவுக்கு மோசமானவரா?
‘குரு பிரேமா கோசமே’ என்பது படத்தின் பெயர்.
கதாநாயகி அனுபமா பரமேஸ்வரன் சரியாக ஒத்துழைப்பது இல்லை, டயலாக்கை சரியா சொல்ல மாட்டேங்கிறார் என்று நாயகியைப் பற்றி பிரகாஷ்ராஜ் சொன்னதால் அந்த நடிகை முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறார் .
இந்த நிலையில் காமடி நடிகரின் கன்னத்தில் செல்லமா தட்டிருக்கார் என்று சீரியசாக ஒரு செய்தி வந்திருக்கிறதே….இதுக்கு என்ன சொல்கிறார் பிரகாஷ்ராஜ்.?
“ஐயோ அது நானில்லைங்க” என்கிறாரா?
பொய் என்கிறார் பிரகாஷ்ராஜ்.
எல்லாம் தெரிந்திருக்கவேண்டிய இயக்குநரோ “அப்படியா பேசிக்கிறாங்க?”என நம்மிடமே கேட்கிறார்.
கிணத்தில ஏதோ விழுந்திருக்குங்க! எறங்கினால்தான் தெரியும்.