‘ஜெயில்’ படக்குழுவினருக்கு அன்று உண்மையிலேயே நல்ல நேரம்தான்! கண்ணகி நகர் பகுதியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது நிஜமான சேஷிங் சீன் நடந்திருக்கிறது.
என்னடா பூனை இப்படி ஓடுகிறது என்று பார்த்தால் நிஜமாகவே நாய் துரத்தி வந்ததைப் போல ஷூட்டிங் ஆட்களைப் பிளந்து கொண்டு கத்தி,கம்புகளுடன் ஒரு கோஷ்டி ஓடிஇருக்கிறது. ஷூட்டிங் ஆட்கள் அந்த நேரத்தில் கோஷ்டி கலவரம் நடக்கும் என்றா எதிர்பார்த்தார்கள்.?
‘வுடு ஜூட்’ என்று ஜி.வி.பிரகாஷ்,அபர்நதி மற்றும் படக்குழுவினர் திறந்து கிடந்த வீடுகளில் அபயம் தேடிக்கொண்டார்கள். வேடிக்கைப் பார்த்தவர்கள் அனுபவசாலிகள் என்பதால் ஓடிப்போனார்கள்.
கிரிகேஷ் சினி கிரியேஷன்ஸ் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிப்பில் உருவாகிவரும் ,”ஜெயில்”படத்தின் ஷூட்டிங்கில்தான் இந்த மோதல் மேட்டர். .
இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்-அபர்ணதி, சிற்பி மகன் நந்தன்ராம், பசங்க பாண்டி, ராதிகா, ரவிமரியா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
அங்காடி தெரு, வெயில் இரு படங்களையும் யதார்த்தமாக படமாக்கி அனைவரின் பாராட்டையும் பெற்ற வசந்தபாலன் “ஜெயில்” படத்தை இயக்கி வருகிறார்.