வெற்றிமாறனின் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் வெளி வந்த படம்தான் வடசென்னை. விவகாரங்கள் நிறைந்த இந்த படத்தில் சில காட்சிகள் கண்களையும் காதுகளையும் உறுத்தின. எதிர்ப்புகள் வராமல் இருக்குமா?
“நாங்கள் எங்கள் படகுகள்,கட்டுமரங்களை புனிதமாக கருதுகிறோம்.அதன் புனிதத்தைக் கெடுத்திட்டிங்களே என கண்டனங்களை பறக்கவிட” இதோ ,அந்த காட்சிகளை வெட்டி வீசிட்டோம்”என்று வெற்றி மாறன் அறிக்கை விட்டிருக்கிறார்.
அமீர் ,ஆண்ட்ரியா நடிப்பில் இடம்பெற்றிருந்த முதலிரவு காட்சி மீனவ சமுதாய சகோதர சகோதரிகளின் மனம் புண்படும்படி இருந்ததாகவும் அக்காட்சியை படத்தில் இருந்து நீக்கும்படியும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தற்போது படக்குழு அந்த காட்சியை நீக்கி விட்டு அதற்கு பதிலாக அமீர்,ஆண்ட்ரியா நடித்துள்ள வேறு இரு காட்சிகளை இணைத்துள்ளனர்.
மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் வசனங்கள் சிலவும் நீக்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.