பாலைவனச் சோலை’ உள்பட பல படங்களை இயக்கிய இரட்டையர் இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் (ராபர்ட்) ராஜசேகர் இன்று காலை ராமச்சந்திரா மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். திரைப்பட நடிகராகவும் வலம் வந்த ராஜசேகர் சின்னத்திரை நடிகராகவும்,சின்னத்திரை சங்கங்களிலும் முக்கிய பொறுப்புகள் வகித்தார்.
கடந்த சில நாட் களாக உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை போருர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். ராபர்ட்ராஜசேகர், ‘மனசுக்குள் மத்தாப்பூ’, ‘சின்னப்பூவே மெல்லப் பேசு’, ‘தூரம் அதிகமில்லை’, ‘பறவைகள் பலவிதம்’, ‘தூரத்துப் பச்சை’, ‘கல்யாணக் காலம்’ உள்பட பல படங்களை இயக்கியுள்ளனர்.
மறைந்த நடிகர் இயக்குனர் ராஜசேகரின் உடல் சென்னை வடபழனியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது அவரது உடலுக்கு திரையுலகினர் பலர் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.