ஏழுமலையான் இருக்கானே விளையாட்டுப் பிள்ளை.!
காலா காலத்தில கொடுக்க வேண்டிய பிள்ளை வரத்தை 54 வருஷமாக கொடுக்காம விட்டுட்டு எழுபத்தி நாலு வயசில கொடுத்திருக்கான்னா அது என்னங்க சோதனை?
அந்த பாட்டி,தாத்தாவுக்கு மகிழ்ச்சிதான்னாலும் பள்ளிக்கூடம் போறதை பார்க்க வேணாமா,அந்த பிள்ளைகளுக்கு கல்யாணம் காட்சி பண்ணி பார்க்க வேணாமா?
உலகத்திலேயே இந்த வயசில இரட்டை பிள்ளைகளை பெத்த சாதனை மங்கையம்மாபாட்டிக்கு உண்டு. சாதனை பண்ணிட்டாங்கன்னு உற்றமும் சுற்றமும் கொண்டாடுது.
அதாவது கிழக்கு கோதாவரியில் ஒய்.ராஜா ராவ் -மங்கையம்மா இருவருக்கும் கல்யாணமாகி ஐம்பத்தி நாலு வருஷமா பிள்ளைகள் இல்ல.
அகல்யா மருத்துவ மனைக்குப் போய் செயற்கை முறை (ஐ.வி.எப் )வழியாக கர்ப்பம் ஆனாங்க. கணவரின் விந்தணுவை எடுத்து கர்ப்பப்பைக்குள் செயற்கையாக வைத்து வளர்ப்பதுக்கு இந்த பெயரு.
நல்லபடியா இப்ப இரட்டைக் குழந்தை. அறுவை சிகிச்சை வழியாக!
“கடவுள் எங்களை கை விடல” என்று தாத்தா சந்தோஷமா இருக்கார். ஊரே அவங்களை கொண்டாடுது. படத்தில அவங்களை பார்த்து சந்தோஷப்படுவோம்.
நாமும் வாழ்த்துவோம்.