நடந்தது தர்மபுரியில்!
கலையரசன் என்பவர் பாஜக வை சேர்ந்தவர் என்கிறார்கள்.ஆனால் போலீஸ் இன்னும் கட்சியை உறுதி செய்ய முடியவில்லை என்கிறது. ஆளையும் கைது செய்யவில்லை.! வழக்கு மட்டும் பதிவாகியிருக்கிறது.
ஹரூரை சேர்ந்தவர் கலையரசன். தந்தை பெரியார் பிறந்த நாளன்று சாணியில் கேக் மாதிரி செய்து அதில் மெழுகு வர்த்தி வைத்து அந்த சாணியை பிய்த்து பெரியார் படத்தின் மீது அப்பி இருக்கிறார். பின்னர் செருப்பு மாலையும் போட்டிருக்கிறார். பசுச்சாணமோ!
இதல்லாம் செய்து விட்டு அதை தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இதை பார்த்து அதிர்ச்சியான திராவிடர் கழகத்தை சேர்ந்த வேடியப்பன் போலீசில் புகார் செய்திருக்கிறார் .இவ்வளவு நாள் ஆகியும் ஆளையும் பிடிக்கவில்லை.வெறும் வழக்கை மட்டும் பதிவு செய்திருக்கிறது காவல் துறை.
பாஜக மேலிடத்தில் இருந்து தமிழக அதிமுக அரசுக்கு அனுமதி கிடைக்கவில்லையோ என்னவோ!