கேரளம்,தமிழ்நாடு இரண்டு மாநிலங்களிலும் சோலார் பேனல் ஊழல் வழக்கில் சம்பந்தப்படடவர் நடிகை சரிதா நாயர்.
கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது நடிகை சரிதா நாயர் இன்னும் சிலர் மீதும் சோலார் பேனல் ஊழல் வழக்கு தொடரப்பட்டது. அப்போது பரபரப்பான தகவல்களை சொல்லி மீடியாக்களின் டிஆர்பி ரெட்டை எகிற செய்தார்.
நடிப்பதில் அவ்வளவாக திறமையைக் காட்டா விட்டாலும் தன் மீதான மோசடி வழக்கில் பிரமாதமாக நடித்தார். முதல்வர் உம்மன் சாண்டியை சந்திக்க சென்றபோது அவர் தன்னை செக்ஸுக்கு அழைத்தார் என்று உச்சக்கட்ட புகாரை அடுக்கினார்.
உம்மன் சாண்டியை பற்றி கேரளம் முழுக்க நல்ல பெயர் உண்டு. வயதான அந்த மனிதர் தன்னை ஓரல் செக்ஸுக்கு கூப்பிட்டார் என்று சொன்னதை யாருமே நம்பவில்லை. ஊழல் வழக்கில் சரிதா நாயருக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் கேரளா நீதி மன்றம் 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. ஆனால் அந்த வழக்கில் அவர் ஜாமீனில் வந்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் வடவள்ளியை சேர்ந்த தியாகராஜனிடம் 28 லட்சமும் ஊட்டியை சேர்ந்த வெங்கட்ரமணா,ஜோயோ ஆகியோரிடம் 5 லட்சத்துக்கும் அதிகமாக வாங்கியதாகவும் சோலார் பேனல் ஊழல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சரிதா நாயர்,இவரின் முன்னாள் கணவர் பிஜு ராதா கிருஷ்ணன், மானேஜர் ரவி ஆகிய மூவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டது .இந்த வழக்கில் கோவை நீதி மன்றம் 3 ஆண்டு ஜெயில் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.