ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடந்து வருகிறது. இவ்விழாவில் இயக்குநர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்துகொண்டு பேசியதாவது , ‘எனக்கு அரசியல் தெரியாது. ஆனால் என்னை சீண்டி அரசியல் கத்துக்க வெச்சுடாதீங்க. ரஜினியை யார் தவறாக பேசினாலும் நான் அதற்கு பதில் சொல்வேன்.
படத்திற்காக அரசியலுக்கு வருகிறார் என்று சொல்கிறார்கள். பப்ளிசிட்டிகாக வருகிறாரா? ஏய், என் தலைவரே பப்ளிசிட்டிடா’ ‘தான் அரசியலுக்கு வருவேன்னு சொல்லும்போது கூட ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி அவர்களை புகழ்கிறார். பாபா படத்திற்கு நஷ்டத்தை திருப்பி கொடுத்தார். யாராவது செய்வார்களா?
இந்த வயதில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டிய அவசியம் என்ன? அவர் நிச்சயமாக பணம் சம்பாதிக்க வரவில்லை. அரசியலுக்கு ஏன் அவர் வருகிறார் என்று புரிந்து கொள்ளவேண்டும் ரஜினி நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு கருத்து இருக்கும். தர்பாரிலும் கருத்து இருக்கும் என நம்புகிறோம்.
சின்ன வயதில் கமல்ஹாசனின் போஸ்டர் ஒட்டிருந்தால் நாங்கள் சாணி அடித்திருக்கோம். ஆனால் அவர்கள் எப்படிப்பட்ட நண்பர்கள் என இப்போதுதான் தெரிகிறது. நாங்கள் இப்போது உணர்ந்துவிட்டோம். அதிசயம் அற்புதம் என எவ்வளவோ பேர் பேசி இருக்கிறார்கள்.ஆனால் ரஜினி சொன்னால் தான் அனைவரும் பேசுவார்கள். ரஜினியே ஒரு அதிசயம். அவர் ஒரு அற்புதம். மு.க.ஸ்டாலின் தொடங்கி, எனக்கு அவர் பெயர் சொல்ல பிடிக்கல(சீமான்) அவர் வரை அனைவரையும் புகழ்ந்துள்ளார்.
’‘முரசொலியில் ரஜினியைப்பற்றி தவறாக எழுதினார்கள். பின்னர் வருத்தம் தெரிவித்தனர். அதற்கு மு.க.ஸ்டாலின் பயந்து விட்டார் என்று அர்த்தமல்ல. அது ரஜினி மீதுள்ள மரியாதை’ ‘நான் இந்த மேடையில் இப்படி பேசினதுக்கு ரஜினி என்னிடம் பேசாமல் போனாகூட பரவாயில்லை.
ஆனால் சீமான் பேச்சு நாட்டுக்கு நல்லதல்ல’‘பாட்ஷாவை மிஞ்சும் அளவுக்கு தர்பார் அமையும் என எனக்கு தோன்றுகிறது. கமல், ரஜினி இருவரும் கை கோர்த்து நடக்கும்போது புரியுது. இன்னும் என்ன நடக்குமோ? அதிசயம் அற்புதமே ரஜினி தான்’ என்று தெரிவித்தார்.