ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கி தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது.இந்நிலையில்,கரூர், நாமக்கல், சிவகங்கை, சேலம், திருச்சி, நீலகிரி, மதுரை, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல் உள்பட 24 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவுபெற்று உள்ளது.இது தேர்தலில் திமுக கூட்டணியே பெருவாரியான இடங்களை கைப்பற்றியுள்ளது.அதன் விபரம் வருமாறு;
ஒன்றிய கவுன்சிலர்பதவி :
திமுக – 2,338
அதிமுக – 2,185,
மாவட்ட கவுன்சிலர்:
திமுக 270,
அதிமுக 242 .
மதுரை, நீலகிரி, திண்டுக்கல், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், ராமநாதபுரம், திருச்சி, சிவகங்கை மாவட்ட கவுன்சில்களை வென்றது திமுக கூட்டணி.
கோவை, சேலம், தருமபுரி, கடலூர், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், நாமக்கல், தேனி, திருப்பூர், தூத்துக்குடி, அரியலூர் மாவட்ட கவுன்சில்களை அதிமுக கூட்டணி வென்றது.












