என்ன கொடுமை சரவணா!
நம்ம பாரத தேசத்து பெண்மணி ஒரு விசித்திரமான கோரிக்கையோடு பிராது கொடுத்திருக்கிறாள்.
அந்த பெண்மணியின் பெயர் சோனி தேவி.வயது 20. இந்த பெண்ணின் கணவருக்கு 23 வயது. பெயர் மணிஷ்ராம் . குடியிருப்பது பாட்னா .
மாநில பெண்கள் கமிஷனில் மனு கொடுத்திருக்கிறாள் மனைவி சோனி.
“எவ்வளவோ சொல்லிப்பார்த்தாச்சு .திருந்துற மாதிரி தெரியல. நாள் கணக்கில பல்லு விலக்கமாட்டேங்கிறார் .குளிக்கிறதில்ல. ஷேவ் பண்றதில்ல. இப்ப கூட பத்து நாளா பல்லு விலக்காமதான் இருக்கார் .கிட்ட வந்தாவே அழுக்கு நாத்தம். எப்படி தாம்பத்யம் சுகப்படும்? அதனால் என்னோட வாழ்க்கையை நாசமாக்க விரும்பல .டைவர்ஸ் வேணும் ” என்று சோனி சொல்கிறார்.
அது நியாயமா இல்லியா ?கமிஷன் என்ன சொல்லப் போகுதோ?