சென்னை அருகே உள்ள ஆவடியில் மத்திய கனரக வாகன தொழிற்சாலை உள்ளது. இங்கு வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் இடையே ஷிப்ட்டிங் மாறுதல் தொடர்பாக அவர்களிடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த நீலம்சின்ஹா என்ற ஊழியர், தனது சக ஊழியரான கிரிஜேஷ்குமார் என்பரை நோக்கி தனது துப்பக்கியால் சரமாரியாக சுட்டார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் கிரிஜேஷ்குமார்என்பவர் மீது ஆறு குண்டுகள் பாய்ந்தது. அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். கிரிஜேஷ்குமார் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நீலம்சின்ஹாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு சக ஊழியர்களிடையே நடந்த மோதலில் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.