சென்னை அருகே பனையூரில்உள்ள நடிகர் விஜய் வீட்டில் நேற்று இரவு முதல் விடிய,விடிய தொடங்கிய வருமானவரித்துறையின் சோதனை தற்போது நிறைவு பெற்றது. மூன்று கார்களில் அடுத்தடுத்து அவர்கள் வெளியேறிச் சென்றனர்.விஜய் வீட்டுக்கு முன்பு போடப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசாரும் விலக்கி கொள்ளப்பட்டு விட்டனர். இரண்டாவதாக வெளியேறிய ஒரு காரில் மட்டும் கருப்பு பையில் சில ஆவணங்கள் எடுத்துச்செல்லப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
சுமார் 23 மணி நேரத்திற்கும் மேலாக மொத்தம் 6 வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இச் சோதனையின் போது, விஜய் அவரது மனைவி சங்கீதா ஆகியோரிடம், வருமானவரித்துறையினர் வாக்குமூலம் பெற்று, விஜய்யின் சொத்து விவரங்கள் மற்றும் முதலீடுகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டதாகவும், பிகில் படத்துக்காக அவர் வாங்கியதாக கூறப்படும் ரூ.30 கோடி சம்பளம் குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.