சீனாவின் நன்கொடை என்கிற அளவுக்கு 25 நாடுகளுக்கு கொரானா வைரஸ் பரவி இருக்கிறது..அந்தந்த நாடுகளில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு மக்கள் உறங்கி எழுகிறார்கள்.
“யாராவது விஞ்ஞானிகள் இதற்கு மருந்து கண்டு பிடிங்க கோடிகளில் பணம் தருகிறேன் “என்று உலகம் அறிந்த ஜாக்கிஜான் சொல்லியிருக்கிறார்.
இந்த நிலையில் இந்தியாவில் இருக்கிற திரைப்பட நடிகர்கள் ,தயாரிப்பாளர்கள் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்துவதற்கு பயப்படுகிறார்கள். பாங்காக் பறந்து சென்று படப்பிடிப்பு நடத்த திட்ட மிட்டிருந்த நடிகர் நாகார்ஜுனா ரத்து செய்து விட்டு ஹைதராபாத்திலேயே பாரின் மாதிரி செட் போடச் சொல்லியிருக்கிறார்.