![]() ![]() |
|||
|
கதற கதற கற்பழிப்பு என்கிற பத்திரிக்கை தலைப்புகளுக்கு தற்போது வேலை இல்லாமல் போய் விட்டது.
குளிர் பானங்களில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து மயக்க நிலையில் தங்கள் வேலையை முடித்துக் கொண்டு அதை வீடியோவாகவும் பதிவு செய்து கொள்கிறார்கள். அதை காட்டி அடிக்கடி தங்களின் ஆசையை தீர்த்துக் கொள்கிறார்கள்.
இப்படியொரு வழக்கில்தான் சூர்ய பிரகாஷ் என்கிற வில்லனின் மகன் விஜய் ஹரீஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
வில்லனின் பெயர் முன்பு சூர்யகாந்த் .தற்போது சூர்ய பிரகாஷ்.அதிமுக பேச்சாளர். தூறல் நின்னு போச்சு ,கிழக்கு சீமையிலே உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
இவரது மகனும் “நாங்களும் நல்லவங்க தான் ‘என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவருக்கும் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவிக்கும் காதல்.
தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத போது மாணவியை வீட்டுக்கு அழைத்து சென்றிருக்கிறார்.
வந்த விருந்தாளிக்கு கூல்ட்ரிங்ஸ் கொடுத்திருக்கிறார்.அதில்தான் மயக்க மருந்து கலந்து இருந்திருக்கிறது.
மயக்கமுற்ற மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவாகவும் பதிவு செய்திருக்கிறார்.அதை காட்டி மிரட்டியே காரியம் சாதித்துக் கொண்ட நடிகரின் டார்ச்சர் தாங்காமல் மாணவி வண்ணாரப்பேட்டை அனைத்து மாவட்ட மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார். நடிகர் விஜய் ஹரீஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.