
இந்நிலையில், நாடு முழுவதும் மேலும் இரண்டு வாரங்களுக்கு அதாவது, வரும் மே, 17 -ம் தேதி வரை இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.அதே சமயம் நாடு முழுவதும் சிவப்பு மண்டலம் (130), ஆரஞ்சு மண்டலம் (284), பச்சை மண்டலம் (119) என மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சில தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதாவது,பச்சை மண்டல பகுதிகளில் 50 சதவீத பயணிகளுடன் 50 சதவீத பேருந்துகளை இயக்க அனுமதி என்றாலும், மக்கள் அதிகமாக கூடும் எந்த நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி கிடையாது.
ஆரஞ்சு மண்டலங்களில் ஒரு பயணியுடன் காரை இயக்கலாம். மக்கள் அதிகமாகக் கூடும் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி கிடையாது. நாடு முழுவதும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பஸ் டெப்போக்களில் 50 சதவீத பஸ்களை மட்டுமே இயக்க வேண்டும்.
சிவப்பு மண்டல பகுதிகளில் எந்த தளர்வும் இல்லை,கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும் பேருந்துகள், சலூன்கள், அழகு நிலையங்கள் இயங்க தடை தொடரும்.இரவு 7 மணி முதல் காலை 6 மணிவரை மக்கள் வெளியே வரக்கூடாது.முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வீட்டை விட்டுக் கண்டிப்பாக வெளியே வரக்கூடாது.தனியார் அலுவலகங்கள் 33சதவீத பணியாளர்களுடன் மட்டுமே செயல்பட வேண்டும்.நகர பகுதிகளில் சில கட்டுப்பாடுகளுடன் ஆலைகள் இயக்க அனுமதி. இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறபட்டுள்ளது.
(21 நாட்களுக்கு கொரோனா தொற்று இல்லாத மாவட்டம் பச்சை மண்டலமாக மாற்றப்படும் என்றும் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.)