பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரம் ,போதைப் பொருள் கும்பல் மற்றும் மாஃபியா குறித்தும் நடிகை கங்கனா ரனாவத் சமீப காலமாக கடுமையாக விமர்சித்தும் தொடர்ந்து கருத்துக்கள் கூறியும் வருகிறார்.இதனால் அவருக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மும்பையை மினி பாகிஸ்தான் என்று கூறிய விவகாரத்தில் ,சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்துக்கும், கங்கனா ரனாவத்துக்கும் இடையே டுவிட்டரில் கடுமையான மோதல் எழுந்துள்ளது. மும்பையை மினி பாகிஸ்தான் என்று விமர்சித்த விவகாரத்தில் கங்கனா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி மன்னிப்புக் கேட்காவிட்டால், மும்பைக்கு வரக்கூடாது என்று எச்சரித்துள்ளார். இத்தகைய பரபரப்பான சூழலில், மத்திய உள்துறை அமைச்சகம் கங்கனா ரனாவத்துக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது .
இந்நிலையில் தனக்கு ‘ஒய்பிளஸ்’ பாதுகாப்பு அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நடிகை கங்கனா ரனாவத் அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ இந்த தேசத்தில் யாருமே தேசப்பற்றை ஒடுக்க முடியாது என்பதைத்தான் இது வெளிப்படுத்துகிறது.
எனக்கு பாதுகாப்பு அளித்து உத்தரவிட்டஉள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றி.அமித் ஷா விரும்பியிருந்தால், சூழ்நிலைகள் காரணமாக, சில நாட்களுக்குப் பிறகு என்னை மும்பைக்கு வருமாறு கூறியிருக்கலாம்.
ஆனால், அமி்த் ஷா இந்தியாவின் மகளை மதிக்கிறார், என்னுடைய சுயமரியாதையை உணர்ந்துள்ளார். ஜெய்ஹிந்த்” இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத்துக்கு மத்திய அரசு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கியது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும்,பாஜகவின் கிளியாக கங்கனா மாறிவிட்டார் என்றும்,மகாராஷ்டிரா அரசின் நிவாரணப்பிரிவு மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் விஜய் வாடேத்திவார்கூறியுள்ளார். .