உலகநாயகன் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசனை தனது முதல் படமான ‘தாதா 87’-ல்ஒரு டானாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி.தற்போது, பொல்லாத உலகில் பயங்கர கேம் (பப்ஜி) என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படங்களைத் தொடர்ந்து, ‘பவுடர்’.என்ற தலைப்பில் தனது மூன்றாவது படத்தை கதை,திரைக்கதை வசனம் எழுதி இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகை வித்யா பிரதீப் கதையின் நாயகியாகவும் மனோபாலா,வையாபுரி,ஆதவன், அகல்யா வெங்கடேசன்உள்ளிட்ட பலர் நடிக்க, இவர்களுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகமாகிறார் பிரபல சினிமா பிஆர்.ஓ நிகில் முருகன்..
இப்படம் குறித்து இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி. கூறியதாவது: எனது முதல் படத்தில் சாருஹாசன் சாரை ஒரு டானாக அறிமுகப்படுத்தினேன். அந்தப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல், எனது பப்ஜி படத்தில் ஐஸ்வர்யா தத்தாவை முற்றிலும் மாறுப்பட்ட வேடத்தில் நடிக்க வைத்துள்ளேன். 10 ஆண்டுகளுக்குப் பின் நடிகர் ஜனகராஜை மக்கள் மத்தியில் தாதா -87 படம் மூலம் மீண்டும் கொண்டு சேர்த்தேன்.
அப்படத்தில் நடிகர் சாருஹாசனை நான் ஒரு டானாக காண்பித்தபோது ரசிகர்கள் அதை ஏற்று மகிழ்ந்தனர். அந்த வரிசையில் இப்போது, திரையுலகினரால் பிஆர்ஓ-வாக மட்டுமே அறியப்பட்ட நிகில் முருகனை மக்கள் முன்னால் நடிகராக களமிறக்கிவுள்ளேன். அவரின் கதாபாத்திரத்தின் பெயர் ராகவன். ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் கமல்ஹாசன் கேரக்டரின் பெயரை ‘பவுடர்’ படத்தில் நிகில் முருகனுக்கு சூட்டியுள்ளேன்.
தீவிர லாக்டவுனுக்குப் பின்னர் படப்பிடிப்புக்கு அரசு அனுமதி வழங்கியபோதே முடித்துவிட்டோம். நாயகி வித்யா பிரதீப்புடனான காட்சிகள் மட்டுமே இன்னும் படமாக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இப்படத்தின் ஒளிப்பதிவை,ராஜபாண்டி ஆர்.பி. கவனிக்க,லீயாண்டர் லீ மார்ட்டி இசையமைத்து வருகிறார்.ஜி மீடியா நிறுவனம் தாயரிக்கும் இப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து உள்ள நிலையில், வருகிற 2021 பவுடர் திரையில் வெளியாகும் என தெரிகிறது.