தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என ஏ.பி.பி செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது.இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி 154 முதல் 162 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று ஏ.பி.பி நிறுவனம் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
அதிமுக கூட்டணி 58 முதல் 66 இடங்களை மட்டுமே வெல்லும் என்றும் அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 2 முதல் 6 இடங்களிலும், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அமமுக 1முதல் 5 இடங்களில் வெல்லும் என்றும் ஏபிபி கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
இதர கட்சிகள் 5-9 இடங்கள் வெல்லும் என்றும் கருத்துக்கணிப்பு வெளியிட்டுளளது.