“லாபம் இல்ல,தியேட்டர் கிடைக்கல,ஏண்டா படம் எடுக்க வந்தோம்னு இருக்கு?” என்கிற ஓலங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் ,மறுபக்கம் புதிய படங்கள் ஆடியோ வெளியீட்டு வரை வந்து விடுகின்றன.
மழைக்கால எறும்புகள் என்றே அவைகளை சொல்லலாம்.
இதோ ஒரு கட்டெறும்பு…!
திகில் மர்மம் நிறைந்த புதிய திரைப்படமாம் ‘நோக்க நோக்க…’
கந்தசஷ்டி கவசத்தை தவறாக சித்தரிப்பவர்களை கடவுள் பழி வாங்குவதாக திரைக்கதை இருக்கிறது.
ஆர் . புரடக்ஸன்ஸ் மற்றும் ஏவிபி சினிமாஸ் சார்பில் ஆர்.முத்துக்குமார் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
இவர் தமிழில் ஏற்கனவே தொடக்கம், வெண்ணிலாவின் அரங்கேற்றம் தெலுங்கில் ஸ்ரீராமுடு, கன்னடத்தில் பிரன்ட்லி பேபி , சாக்கலேட் பாய் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
நோக்க… நோக்க தணிக்கை செய்யப்பட்டுயு ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.
அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. கதாநாயகனாக புது முகம் அர்ஜீன் சுந்தரம் .
கதாநாயகி நேர்மறை கதாபாத்திரமாக தோன்றுகிறார்.
தொலைக்காட்சி ஊடகத்தில் பணிபுரியும் நேர்மையான நிருபர் பிரதிமா (ஜோதிராய்)
இந்தியாவில் பணமதிப்பிழப்பு அறிவித்த நேரத்தில் நடந்த சட்டவிரோத பண மாற்றுதலை ஆவணமாக்கி ஒளிபரப்புக்கு செல்லும் வேளையில் சமூக விரோதிகளால் கொலை செய்யப்படுகிறாள். அவளது ஒரே மகளையும் கொன்று விடுகின்றனர்.
நாயகியின் பெண் குழந்தை எப்படி அந்த கயவர்களை பேயாக உருமாறி பழிவாங்குகிறாள், கடவுள் அவளுக்கு எப்படி உதவுகிறார் என்பதை படத்தின் இயக்குநர்.முத்துக்குமார் படமாக்கியுள்ளார். இப்படத்தில் பாவனா, சிந்தியா, ஜோதிராய், சுரேஷ், அபி, பேபி அமுல்யா, பேபி ஜனன்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சரி படம் வரட்டும் .கந்தனின் அருள் கிடைக்கட்டும்.!