பிரபல இயக்குனரும் நடிகருமான மனோ பாலா (வயது 69) கடந்த 15 நாட்களுக்கும் மேலாக உடல் நலக்குறைவு காரணமாக அப்பலோ மருத்துவ மனையில் கல்லீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார் வீட்டில் இருந்த படியே சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். இதையடுத்து அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் பாரவைக்காக வைக்கப்பட்டுள்ளது. மனோபாலா 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், மனோபாலா உடலுக்கு திரைத்துறையினர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் மனோபாலாவின் உடல் நாளை காலை 10.30 மணி அளவில் தகனம் செய்யப்பட உள்ளது.
விஜய்யும் நடிகர் மனோபாலா உடலுக்கு அவரது இல்லம் சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.இயக்குநர் மணிரத்னம், ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம், நடிகர்கள் சரத்குமார் சத்யராஜ்,சித்தார்த், நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளனர். இந்நிலையில், நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.மனோபாலாவின் ஒரே மகனான ஹரீஷ் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார்.
மனோபாலா மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் திரையுலக பிரபலங்கள் பாரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்
மனோபாலா மறைவுக்கு அரசியல் தலைவர்கள் திரை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்: “திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்; அவரது குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்”
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: “தமிழ் திரைப்பட இயக்குனரும், பிரபல நடிகருமான மனோபாலா உடல்நலக் குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்
அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்: பிரபல திரைப்பட நடிகரும், இயக்குநருமான மனோபாலா உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்; அவரது குடும்பத்திற்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை: “பிரபல திரைப்பட இயக்குனரும், சிறந்த நடிகருமான மனோபாலா காலமான செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்;
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: எனது அன்பு நண்பர், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்ட மனோபாலா காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: தமிழ்திரைப்பட இயக்குனரும், நடிகருமான மனோபாலா உடல் நலக்குறைவால் காலமானார் என்பதை அறிந்து வருத்தம் அடைந்தேன்;
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்: “இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது;
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்: காலத்தால் அழியாத கலைப்படைப்புகளைத் தந்த திரைப்பட இயக்குநரும், தனது நகைச்சுவை ததும்பும் நடிப்பால் மக்களை மகிழ்வித்த ஆகச்சிறந்த குணச்சித்திர நடிகருமான என் பேரன்புக்குரிய அண்ணன் மனோபாலா மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
ரஜினிகாந்த் : மனோபாலாவின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.
இயக்குனர் டி.ராஜேந்தர்: இயக்குநரும் நடிகருமான மனங்கவர் மனோபாலா அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி என் மனதை வருத்தியது. அவரை இழந்து வாடும் அவர்களின் இல்லதாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இயக்குனர் பாரதிராஜா: “என் மாணவன் மனோபாலா மறைவு, எனக்கும் எங்கள் தமிழ் திரை உலகுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.”
நடிகர் சூரி: “திறமையான இயக்குனர், கனிவான தயாரிப்பாளர், அருமையான நடிகர், அனைவருக்கும் பிடித்த மிகச்சிறந்த மனிதர் மனோபாலா; அவரது இறப்பு தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, தமிழ் சமூகத்துக்கும் பேரிழப்பு”
நடிகர் தம்பி ராமையா: மனோபாலாவின் இழப்பு, மிகப் பெரிய இழப்பு. அடுத்தவரைப் பார்த்து பொறாமைப்படாதவர் மனோபாலா. உழைக்காமல் அவரால் இருக்க முடியாது. விவேக், மயில்சாமி, மனோபாலா என அடுத்தடுத்த இறப்புகள் கொடுமையானது.
கவுதம் கார்த்திக்: மனோபாலா நம்மோடு இல்லை என்ற செய்தி என் இதயத்தை நொறுக்கியது. உங்களோடு பணியாற்றியது உண்மையில் ஒரு மகிழ்ச்சியான ஒரு தருணமாக இருந்தது. நிச்சயமாக உங்களை மிஸ் செய்வோம்.
சிங்கமுத்து: மனோபாலா எல்லோரிடமும் சகஜமாக பழகக்கூடியவர்; வரிசையாக சினிமா பிரபலங்கள் உயிரிழப்பது வருத்தமாக உள்ளது. எல்லாருக்காகவும் முன்நின்றவர் அவர். கார்த்தி: இந்தச் செய்தியை கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்தேன். எல்லா இடங்களிலும் எல்லாருக்காகவும் இருந்த ஒரு மனிதர்.
இயக்குநர் சேரன்: தாங்க முடியாத செய்தி. மனதை உலுக்கி எடுக்கிறது. நான் பெற்ற உங்கள் அன்பு மறக்க முடியாதது. போய் வாருங்கள் மாமா.”