பெரிய ஹீரோக்களுடன் மோதுவது என்றால் சிலர் நடுங்குவார்கள்.
“நமக்கெதுக்கு வம்பு? நாமும் பத்தோடு பதினொன்றாக அவருக்கு வாழ்த்துப்பா பாடி விட்டுப் போய்விடுவோம் “என்றுதான் பம்முவார்கள்.
ஆனால் ‘நாயகி ‘ ‘என் வழி தனி வழி’ ‘வெடி’ ஆகிய படங்களின் கதாநாயகி பூனம் கவுர் ஆந்திராவின் மிகப்பெரிய ஹீரோவான பவன் கல்யாணுடன் மோதிக் கொண்டிருக்கிறார்.
“அவரை நம்பி விடாதீர்கள்.உங்களை எல்லாம் முட்டாள்களாக்கப் பார்க்கிறார். அவர் ஓர் ஏமாற்றுப்பேர்வழி!” என கடுமையான வார்த்தைகளால் அர்ச்சனை பண்ணி இருக்கிறார்.
யாரால் ஏவி விடப்பட்டிருக்கிறார்,எதனால் இப்படி எல்லாம் குமுறிக் கொண்டு இருக்கிறார் என்பதற்கான காரணங்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள் .
அரசியல் தலைவரின் தூண்டுதல்தான் காரணம் என்கிறார்கள்.